நான் படித்த ஒரு கேள்வி பதில் பகுதியில் இருந்து ஒரு சிறிய துணுக்கு...
கேள்வி..
சமீபத்தில் தமிழக அரசு கிறிஸ்துவ மற்றும் முஸ்லிம் இனத்தவருக்கு 7ரூ இட ஒதுக்கீடு செய்து அவசரச் சட்டம் பிறப்பித்துள்ளது. இந்த இடஒதுக்கீடானது பெருவாரியாக உள்ள பிற்படுத்தப்பட்டோர் இடஒதுக்கீட்டில் இருந்து வழங்கப்பட்டுள்ளது. இதை எவ்வாறு தாங்கள் ஆதரிக்கின்றீர்கள்? சுதந்திரம் அடைந்து 60 ஆண்டுகள் ஆகியும், இன்னும் எத்தனை வருடங்களுக்கு இட ஒதுக்கீடு என்ற பெயரில், திறமையற்றவர்களுக்கு முன்னுரிமை கொடுத்து இந்தியாவின் வளர்ச்சியை தடுக்கப் போகின்றீர்கள்?..
பதில்...
உங்கள் கேள்வியே தவறானது. திறமையற்ற, தோல்வி அடைந்தவர்களை யாரும் தேர்வு செய்வதில்லை. தகுதி, திறமை என்பது பற்றி சரியான தெளிவான விளக்கம் இல்லையே! 5000 ஆண்டுகாலமாக நிலவியதற்கு 50 ஆண்டுகால இடஒதுக்கீடு என்பதே யானைப் பசிக்கு சோளப் பொரி மாதிரி என்பதைப் புரிந்து கொள்ளுங்கள்...
பதில் சிறியதாயினும்..அலுத்தமும் ஆழமும் அதிகம்...நான் எனது பார்வையில் உங்களுடன் ஒரு சில கருத்துக்களை ஆராயும் ஆவளுடன்..இதோ ஒரு சில வாதங்கள்...
13 ஆம் நூற்றாண்டு முதல் 16 ஆம் நூற்றாண்டு இறுதி வரை...விஜய நகர நாயக் அரசாட்சி.தமிழர்கள் நாடு இலந்து அடிமை வாழ்க்கையை ஆரம்பித்த காலம்..
அதற்க்கு முன்னும் சாதி பாகுபாடுகள்..ஆனால் ஒரு மொழிக்குள்...தமிழ் நாட்டு மக்களும், மாற்று மொழி இனத்தவரும் கலந்து அதே சாதி அடிப்படையில் அடிமை வாழ்க்கை...அப்போது முக்கிய தொழிலான விவசாயம்.. அடுத்த மொழி மேல் இனத்தவர் கைகளில், நிலச் சொந்தகாரார்களாக, கைமாறியது...
அடுத்த இரண்டு நூற்றாண்டுகளுக்கு அயல் நாட்டவர் ஆட்சி என்றாலும் இதே முறை தொடர்ந்தது..அவர்கள் நாட்டை கொள்ளை அடிப்பதில் குறியாக இருந்தர்கள்...
அடுத்த்து நமது சுய ஆட்சி..
ஒருகாலத்தில் பருத்தி பயிரிட்டவர்கள் ஏழைகளின் வியர்வைகளால் கோடிகளை குவித்தார்கள்..சந்ததிகளை கடல் கடந்து கல்வி புகட்டினார்கள்..அவர்களும் சுயதொழில் என மேலும் குவித்தார்கள் கோடிகளை...கோடிகளுக்கேத்த சொகுசு வாழ்க்கை...
மறுபுறம் அரசங்க வேலையும் வங்கி வேலையும்..மேல் மட்டத்தில் இருந்த படித்தவர்கள் மட்டும்... அள்ளிக்கொண்டார்கள் வாய்ப்புகளை... அப்போது ஒரு சில நல்லவர்களால் ஒரு சில மாற்றங்கள்..யானை பசிக்கு சோளப் பொறியாய் வாய்ப்புகள் வழங்கப்பட்டது..
இருப்பினும் பல நூற்றாண்டுகளாக, அடிமைகாளாக ஒரு சில குறிப்பிட்ட வகுப்பினர் மட்டும்.. சமூகத்தல் ஒன்றும் செய்யாமல், ராஜ வாழ்க்கை.மதிப்பு மரியாதை, என அதிகாரவர்கத்தினர் ஒரு புறம்..
வருந்தி உழைப்பவன்.. அதே வருத்தத்துடன்.. உழைப்பவனாகவே... இதில் என்ன கொடுமை என்றால் இன்னும் இதே நிலைதான்...யானைப் பசிக்கு சோளப் பொரி... நியாயம்தானா..??
Monday, November 12, 2007
Subscribe to:
Comments (Atom)