Wednesday, August 29, 2007

சரியா...??....தவறா...?

பீகாரில், ஒரு வாலிபன் செயின் பறிப்பு குற்றத்திற்காக நடுவீதியில் அடி உதை, அதற்கு மேல் காவல் துறையின் அத்து மீறல், அராஞகம்...

பார்த்த அனைவரையும் பதற வைக்கும் ஒரு சம்பவம்...

உண்மையாக யோசித்துப் பார்த்தால்...சரியா தவறா எனப் புழப்படும் நம் அறிவிக்கு...

காசு போதையில், சாலையில் உறங்குபவர்களை கொன்றவர்கள், நல்லவர்களாக நாட்டில்...

உயிர்களை நடுச் சாலையில் நெருப்பில் பொசிக்கியவர்கள், உல்லாசமாக உத்தமர்களாக உளவுகிறார்கள்..

நாட்டுப் பணத்தை கோடி கோடியாக கொள்ளையடித்து, பந்தாவாக வாழும் பதவிப் பிரியர்கள்..

வரி கட்டாமல் இருக்க என்ன என்ன வழி என் யோசித்து ஏமாத்தும், குடிமகன்கள்..

ஐந்துக்கும் பத்துக்கும் அல்லல் படும் ஏழைகளிடம், ஐம்பது நூறு என அடித்து புடுங்கும் காவல்துறையினர்...

இன்னும் இதுபோல் எத்தனை எத்தனை...வறுமையின் கொடுமையால், வாழ்வைத் தொலைக்கும் இது போன்ற அப்பாவிகளை, தண்டிக்கும் நல்லவர்களே..

அடிக்கும்முன் யோசியுங்கள்...சரியா..? தவறா...??...மகிமை புரியும் மகான்களாக மாற வேண்டாம்..மன்னிக்கும் மனிதர்களாக மாறலாமே..மனித்த்தை மதிக்கலாமே...!!!

Thursday, August 16, 2007

!!!...சுதந்திரம்...???

ஒரு காலத்தில்..ஆச்சர்யக் குறி..ஆனால் இப்போது கேள்விக் குறி...

நான் இந்த முறை பலருக்கு சுதந்திர வாழ்த்துச் செய்தி அனுப்பினேன். எனக்கும் பல வாழ்த்துச்செய்திகள் வந்தது..

வந்த ஒரு வாழ்த்துச் செய்தியின் தமிழாக்கம்...
சுதந்திரம் உரிமை அல்ல ..உணர்ச்சி..
பெருமை படுங்கள்..உணர்வதை எண்ணி...

அறுவது வருடங்கள், அறிவியலின் துணையோடு, அற்புதங்கள் அறங்கேரிக் கொண்டிரிக்கும் அருமையான வருடங்கள்...

என் மனதில் தோன்றிய சின்ன கேள்வி..சுதந்திரம் என்ற உணர்வை உண்மயாய் உணர்கிறோமா...??

சுதந்திரத்தை அதிகமாக உணருகிறோம் என எடுத்துக்கொண்டால்..சுதந்திரத்தின் எதிர் பதமான பயத்தை கம்மியாக உணர்வதாக ஒத்துக்கொள்ள வேண்டும்...

எனது இருபத்தியாறு வருட வாழ்க்கையில்.. நாளுக்கு நாள்..பயத்தின் விழுக்காடு..பொது வாழ்க்கையிலும் சரி தனி வாழ்க்கையிலும் சரி, அதிகமாகிக் கொண்டே இருக்கிறதே, தவிர குறைந்ததாகவே தோனவில்லை...

கருத்துக்களைச் சொல்ல பயம், இரவில் பெண்கள் வெளியே வர பயம், வீடு வாங்குவதை நினைத்தால் பயம், அரசு அலுவலகங்களை அண்ட பயம்..காலை சாலை நெரிசலில் வாகனத்தை எடுக்க பயம்..குழந்தைகளுக்கு நல்ல கல்வி என என்னுவதே பயம்..

எங்கும், பணம் இருந்தால் பயம் இல்லை என்ற நிலை..பாலாகும் மனிதம்...

உண்மை உரைக்கத்தான் செய்யும்..உணர்வுகளை உதாசினப்படுத்தாமல், உணர்வுகளுக்கு, உயிர் கொடுக்க உழைப்போம்..ஒன்று சேர உயர்வோம்...

Wednesday, August 15, 2007

இனிய சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்

பல மகாத்மாக்களின், தன்னலமற்ற உயிர் தியாகங்களால் தாரைவார்க்கப்பட்டது இந்த சுதந்திரம்.

இன்று ஒரு நாள் மட்டும், எண்ணி போற்றினால் பத்தாது.. மூச்சும் பேச்சும், நாட்டுக்காகவே...என நாளும் எண்ணுதல் வேண்டும்.

கொண்டாடும் முன் கொஞ்சம் யோசிக்கவேண்டும். எவ்வளவு முன்னேறி இருக்கிறோம்.. நமது முன்னேற்றத்திற்க்கு முட்டுக்கட்டைகள் என்ன..?..இன்னும் இது போல பல...

நாடு முன்னேற சாதி மத பேதங்களை தீயில் இட்டு சாம்பலாக்குவோம்...இயன்ற வரை உதவியாய் இருப்போம், இல்லை என்றாலும் உபத்தரம் இல்லாமல் இருப்போம்...

மனிதர்களை மதிப்போம். அகங்காரங்களை ஒழிப்போம்..பொறாமைகளை புறம் தள்ளுவோம்.. அனைவரும் உயர்வோம்..

குருதியை வியர்வையாக்கி, நாடு முன்னேற நாமும் ஒரு படி கல்லாய் பாடுபடுவோம்....

இனிய சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்...

அன்புடன்,
மு.பாலசுப்ரமணியன்