Monday, November 12, 2007

யானைப் பசிக்கு சோளப் பொரி...????

நான் படித்த ஒரு கேள்வி பதில் பகுதியில் இருந்து ஒரு சிறிய துணுக்கு...

கேள்வி..

சமீபத்தில் தமிழக அரசு கிறிஸ்துவ மற்றும் முஸ்லிம் இனத்தவருக்கு 7ரூ இட ஒதுக்கீடு செய்து அவசரச் சட்டம் பிறப்பித்துள்ளது. இந்த இடஒதுக்கீடானது பெருவாரியாக உள்ள பிற்படுத்தப்பட்டோர் இடஒதுக்கீட்டில் இருந்து வழங்கப்பட்டுள்ளது. இதை எவ்வாறு தாங்கள் ஆதரிக்கின்றீர்கள்? சுதந்திரம் அடைந்து 60 ஆண்டுகள் ஆகியும், இன்னும் எத்தனை வருடங்களுக்கு இட ஒதுக்கீடு என்ற பெயரில், திறமையற்றவர்களுக்கு முன்னுரிமை கொடுத்து இந்தியாவின் வளர்ச்சியை தடுக்கப் போகின்றீர்கள்?..

பதில்...

உங்கள் கேள்வியே தவறானது. திறமையற்ற, தோல்வி அடைந்தவர்களை யாரும் தேர்வு செய்வதில்லை. தகுதி, திறமை என்பது பற்றி சரியான தெளிவான விளக்கம் இல்லையே! 5000 ஆண்டுகாலமாக நிலவியதற்கு 50 ஆண்டுகால இடஒதுக்கீடு என்பதே யானைப் பசிக்கு சோளப் பொரி மாதிரி என்பதைப் புரிந்து கொள்ளுங்கள்...

பதில் சிறியதாயினும்..அலுத்தமும் ஆழமும் அதிகம்...நான் எனது பார்வையில் உங்களுடன் ஒரு சில கருத்துக்களை ஆராயும் ஆவளுடன்..இதோ ஒரு சில வாதங்கள்...

13 ஆம் நூற்றாண்டு முதல் 16 ஆம் நூற்றாண்டு இறுதி வரை...விஜய நகர நாயக் அரசாட்சி.தமிழர்கள் நாடு இலந்து அடிமை வாழ்க்கையை ஆரம்பித்த காலம்..

அதற்க்கு முன்னும் சாதி பாகுபாடுகள்..ஆனால் ஒரு மொழிக்குள்...தமிழ் நாட்டு மக்களும், மாற்று மொழி இனத்தவரும் கலந்து அதே சாதி அடிப்படையில் அடிமை வாழ்க்கை...அப்போது முக்கிய தொழிலான விவசாயம்.. அடுத்த மொழி மேல் இனத்தவர் கைகளில், நிலச் சொந்தகாரார்களாக, கைமாறியது...

அடுத்த இரண்டு நூற்றாண்டுகளுக்கு அயல் நாட்டவர் ஆட்சி என்றாலும் இதே முறை தொடர்ந்தது..அவர்கள் நாட்டை கொள்ளை அடிப்பதில் குறியாக இருந்தர்கள்...

அடுத்த்து நமது சுய ஆட்சி..
ஒருகாலத்தில் பருத்தி பயிரிட்டவர்கள் ஏழைகளின் வியர்வைகளால் கோடிகளை குவித்தார்கள்..சந்ததிகளை கடல் கடந்து கல்வி புகட்டினார்கள்..அவர்களும் சுயதொழில் என மேலும் குவித்தார்கள் கோடிகளை...கோடிகளுக்கேத்த சொகுசு வாழ்க்கை...

மறுபுறம் அரசங்க வேலையும் வங்கி வேலையும்..மேல் மட்டத்தில் இருந்த படித்தவர்கள் மட்டும்... அள்ளிக்கொண்டார்கள் வாய்ப்புகளை... அப்போது ஒரு சில நல்லவர்களால் ஒரு சில மாற்றங்கள்..யானை பசிக்கு சோளப் பொறியாய் வாய்ப்புகள் வழங்கப்பட்டது..

இருப்பினும் பல நூற்றாண்டுகளாக, அடிமைகாளாக ஒரு சில குறிப்பிட்ட வகுப்பினர் மட்டும்.. சமூகத்தல் ஒன்றும் செய்யாமல், ராஜ வாழ்க்கை.மதிப்பு மரியாதை, என அதிகாரவர்கத்தினர் ஒரு புறம்..

வருந்தி உழைப்பவன்.. அதே வருத்தத்துடன்.. உழைப்பவனாகவே... இதில் என்ன கொடுமை என்றால் இன்னும் இதே நிலைதான்...யானைப் பசிக்கு சோளப் பொரி... நியாயம்தானா..??

Wednesday, August 29, 2007

சரியா...??....தவறா...?

பீகாரில், ஒரு வாலிபன் செயின் பறிப்பு குற்றத்திற்காக நடுவீதியில் அடி உதை, அதற்கு மேல் காவல் துறையின் அத்து மீறல், அராஞகம்...

பார்த்த அனைவரையும் பதற வைக்கும் ஒரு சம்பவம்...

உண்மையாக யோசித்துப் பார்த்தால்...சரியா தவறா எனப் புழப்படும் நம் அறிவிக்கு...

காசு போதையில், சாலையில் உறங்குபவர்களை கொன்றவர்கள், நல்லவர்களாக நாட்டில்...

உயிர்களை நடுச் சாலையில் நெருப்பில் பொசிக்கியவர்கள், உல்லாசமாக உத்தமர்களாக உளவுகிறார்கள்..

நாட்டுப் பணத்தை கோடி கோடியாக கொள்ளையடித்து, பந்தாவாக வாழும் பதவிப் பிரியர்கள்..

வரி கட்டாமல் இருக்க என்ன என்ன வழி என் யோசித்து ஏமாத்தும், குடிமகன்கள்..

ஐந்துக்கும் பத்துக்கும் அல்லல் படும் ஏழைகளிடம், ஐம்பது நூறு என அடித்து புடுங்கும் காவல்துறையினர்...

இன்னும் இதுபோல் எத்தனை எத்தனை...வறுமையின் கொடுமையால், வாழ்வைத் தொலைக்கும் இது போன்ற அப்பாவிகளை, தண்டிக்கும் நல்லவர்களே..

அடிக்கும்முன் யோசியுங்கள்...சரியா..? தவறா...??...மகிமை புரியும் மகான்களாக மாற வேண்டாம்..மன்னிக்கும் மனிதர்களாக மாறலாமே..மனித்த்தை மதிக்கலாமே...!!!

Thursday, August 16, 2007

!!!...சுதந்திரம்...???

ஒரு காலத்தில்..ஆச்சர்யக் குறி..ஆனால் இப்போது கேள்விக் குறி...

நான் இந்த முறை பலருக்கு சுதந்திர வாழ்த்துச் செய்தி அனுப்பினேன். எனக்கும் பல வாழ்த்துச்செய்திகள் வந்தது..

வந்த ஒரு வாழ்த்துச் செய்தியின் தமிழாக்கம்...
சுதந்திரம் உரிமை அல்ல ..உணர்ச்சி..
பெருமை படுங்கள்..உணர்வதை எண்ணி...

அறுவது வருடங்கள், அறிவியலின் துணையோடு, அற்புதங்கள் அறங்கேரிக் கொண்டிரிக்கும் அருமையான வருடங்கள்...

என் மனதில் தோன்றிய சின்ன கேள்வி..சுதந்திரம் என்ற உணர்வை உண்மயாய் உணர்கிறோமா...??

சுதந்திரத்தை அதிகமாக உணருகிறோம் என எடுத்துக்கொண்டால்..சுதந்திரத்தின் எதிர் பதமான பயத்தை கம்மியாக உணர்வதாக ஒத்துக்கொள்ள வேண்டும்...

எனது இருபத்தியாறு வருட வாழ்க்கையில்.. நாளுக்கு நாள்..பயத்தின் விழுக்காடு..பொது வாழ்க்கையிலும் சரி தனி வாழ்க்கையிலும் சரி, அதிகமாகிக் கொண்டே இருக்கிறதே, தவிர குறைந்ததாகவே தோனவில்லை...

கருத்துக்களைச் சொல்ல பயம், இரவில் பெண்கள் வெளியே வர பயம், வீடு வாங்குவதை நினைத்தால் பயம், அரசு அலுவலகங்களை அண்ட பயம்..காலை சாலை நெரிசலில் வாகனத்தை எடுக்க பயம்..குழந்தைகளுக்கு நல்ல கல்வி என என்னுவதே பயம்..

எங்கும், பணம் இருந்தால் பயம் இல்லை என்ற நிலை..பாலாகும் மனிதம்...

உண்மை உரைக்கத்தான் செய்யும்..உணர்வுகளை உதாசினப்படுத்தாமல், உணர்வுகளுக்கு, உயிர் கொடுக்க உழைப்போம்..ஒன்று சேர உயர்வோம்...

Wednesday, August 15, 2007

இனிய சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்

பல மகாத்மாக்களின், தன்னலமற்ற உயிர் தியாகங்களால் தாரைவார்க்கப்பட்டது இந்த சுதந்திரம்.

இன்று ஒரு நாள் மட்டும், எண்ணி போற்றினால் பத்தாது.. மூச்சும் பேச்சும், நாட்டுக்காகவே...என நாளும் எண்ணுதல் வேண்டும்.

கொண்டாடும் முன் கொஞ்சம் யோசிக்கவேண்டும். எவ்வளவு முன்னேறி இருக்கிறோம்.. நமது முன்னேற்றத்திற்க்கு முட்டுக்கட்டைகள் என்ன..?..இன்னும் இது போல பல...

நாடு முன்னேற சாதி மத பேதங்களை தீயில் இட்டு சாம்பலாக்குவோம்...இயன்ற வரை உதவியாய் இருப்போம், இல்லை என்றாலும் உபத்தரம் இல்லாமல் இருப்போம்...

மனிதர்களை மதிப்போம். அகங்காரங்களை ஒழிப்போம்..பொறாமைகளை புறம் தள்ளுவோம்.. அனைவரும் உயர்வோம்..

குருதியை வியர்வையாக்கி, நாடு முன்னேற நாமும் ஒரு படி கல்லாய் பாடுபடுவோம்....

இனிய சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்...

அன்புடன்,
மு.பாலசுப்ரமணியன்

Friday, June 29, 2007

ஏன் அரசியல்? - பதவி

ஆறு கோடி மக்கள் (பிரான்ஸ் நாட்டு மக்கள்த்தொகை), கிட்டத்தட்ட 50 வருடங்களுக்கு மேல்..234 பேர்..கிட்டத்தட்ட 14 முறை என நினைக்கிறேன். இதில் எத்தனை பேருக்கு வாய்ப்புகள் வழங்கப்பட்டு இருக்கும்..?..

இதில் ஏழைகள் எத்தனை பேர்..? நடுத்தர மக்கள் எத்தனை பேர்..? பணம் படைத்தவர்களெத்தனை பேர்..? பணம் பன்னியவர்கள் எத்தனை பேர்..? கல்வி அறிவு படைத்தவர்கள் எத்தனை பேர்..? கள்வர்கள் எத்தனை பேர்..?

பெருமை, ஒரு பதவியில் இருப்பது பெருமையான விசியம். ஆனால் ஒரு சிலரால் மட்டுமே, இருக்கும் பதவிக்குப் பெருமை சேருகிறது...

முதல் பதவியை துறந்து, இளையவர்களுக்கு வழி விட்டது ஒரு காலம். புடித்த பதவியில் இருப்பவர்களை விட பிடித்த பதவியை நழுவாமல் பற்றிக் கொள்கிறவர்களே அதிகமாக இருப்பது இக்காலம்...

நொடிகளில் காலம் கணிக்கும் இக்காலத்தில், கண்காட்சியில் வைத்துக் காக்க வேண்டிய தேரை நம்பி, நிலாப் பயணத்தை கனவு கானலாமா..??

எப்போது மாறும்...?

Wednesday, May 23, 2007

ஏன் அரசியல்? - கையூட்டு

நமது நாடு ஒரு குடியரசு நாடு..சொல்லவும், பிறர் சொல்லக் கேற்கவும் பெருமையாகத் தான் இருக்கிறது...ஆனால் நாட்டில் உரிமைகள் மதிக்கப்படுகின்றதா? எனில் பலரிடம் இல்லை என்ற பதிலே வரும்...

சின்ன சின்ன விசியங்களுக்கு கூட அரசாங்கத்தை அனுக அச்சப்படும்படி, புரியாத புதிர்களாய் வழிமுறைகள்... வழிமுறை தெரிந்து முயற்சி செய்தாலும், முட்டுக்கட்டைகளாக காசுக்காக அலையும் கையூட்டு கனவான்கள்...

தேர்தலில் படிக்காதவர்களைப் பற்றி யோசிக்கும் நாம், வழிமுறைகளை வகுக்கும் போது ஏன் எளியோர்களைப் பற்றி எண்ணுவது இல்லை. நேரத்திற்கு ஒரு நாகரீகத்திற்கு மாறும் நாம் ஏன், வறன்ட வ்ழிமுறைகளை மாற்றாமல் இருக்கிறோம்..?

காலை முதல் மாலை வரை, அறுபது ருபாய்க்காக அல்லல் படும் ...ஏழைகளிடம் பத்து இருபது புடுங்கும் முன், முதல் தேதியில் முழு பணத்தையும் கண்ணில் காணும் அரசு கனவான்களே, சற்றே யோசிங்கள் அவர்களின் துன்பங்களை... நன்றி இறைவனுக்கு..ஒரு சில நல்லவர்கள் இருப்பதால் இன்றும் மழைப் பெய்கிறது..

வாழ்வதோ நாம் செலுத்தும் வரிப் பணத்தில்..ஆனால் அரசு அலுவலகங்களில் எதுக்கு எடுத்தாலும் காசு...அது மட்டுமா அலையவிடுவதில் இவர்களுக்கு நிகர் இவர்களே!!

எப்போது எளியவர்களின் உரிமைகள் மதிக்கப்படுகிறதோ..அன்றுதான் சுதந்திரத்துக்காக ஆருயிரை மாய்த்தவர்களின் ஆத்மாக்களுக்கு அமைதி உண்டாகும்...!!

Tuesday, May 22, 2007

ஏன் அரசியல்? - சுயநலம்

ஒரு காலத்தில் நமது நாடு, ஆங்கிலேயர்களிடம் அடிமைப்பட்டு, அல்லலை அனுபவித்து வந்தது...விடுதலை அடைந்தவுடன் விந்தைகள் விளையாடுவற்க்குப் பதில், சுய நலவாதிகளின் சுரண்டலால், களவும் கொள்ளையும் தாண்டவமாட ஆரம்பித்தது ...

வாழ்க்கையை தொலைத்து, நமக்கு சுதந்திர காற்றை அளித்தவர்கள், ஓரம் கட்டப்பட்டனர்.. ஒரத்தில் ஒதுங்கி ஒளிந்தவர்கள் எல்லாம், சமய சந்தர்பங்க்ளை பயன்படுத்தி, பணம் பார்த்தது மட்டும்மின்றி அரியணையிலும் அமர்ந்தார்கள்...

பட்டம் பதவிகளைக் காத்துக் கொள்ள, சுயநல சூழ்ச்சிகலாள், ஒன்றும் அறியா பாமரர்களை ஆசை காட்டி அடிமைகளாக்கினர், அவர்களை அறியவிடாமல்...

உரிமைகள் மறுக்கப்பட்டன, பணத்தின் மதிப்பு உயிரை விட உத்தமாக உயர்ந்தது.

சாதி, மொழி, மதம் போன்ற வேரருக்கப் படவேண்டிய பேதமைகளை...அழிக்காமல், மறைமுகமாக மெருகேற்றி மகிமை கூட்டினார்கள்...

தனது குடும்பம், தனது உறவினர்கள், தனக்கு தெரிந்தவர்கள் என குடியரசு, குடும்ப அரசுகளாக மாற அரம்பித்தது...

அராஞகத்தாலும் அடவடியாலும், நல்லவர்கள் அரசியலை அண்டாதபடி ஒடுக்கப்பட்டார்கள்...புரியாத புதிராய், கிடைத்தது சந்தோசம் என்ற எண்ணத்தில், அடிமைகளாய் இருப்பதை உணராமல் நாமும்....

Tuesday, May 1, 2007

ஏன் அரசியல்? - ஒழுக்கம்

நன்றிக்கு வித்தாகும் நல்லொழுக்கண் தீயொழுக்கம்
என்றும் இடும்பை தரும்..
.........என்பது வள்ளுவரின் பொய்யா மொழி...உண்மைதான்...இது எக்காலத்துக்கும் ஏத்த மொழிதான்.

நாம் அல்லல் படுவதற்க்கு ஆணிவேர், ஒழுக்கமின்மை. போக்குவரத்து நெரிசலில் புறள்வதற்கும், வறுமையில் வாடுவதற்கும், பட்டினிக்கும் பஞ்சத்திற்கும், நிம்மதியை துளைத்ததுற்கும் ஒரே காரணம் ஒழுக்கமின்மை.

ஒழுக்கமின்மை - நமது மனதிற்கு தவறு என தட்டும் ஒன்றை, மனதை சமாதானப்படுத்திவிட்டு, சாதிக்க நினைப்பதே ஒழுக்கமின்மை.

போக்குவரத்து நெரிசலில், நமக்கு முன் இருப்பவனும் நம்மை போல துன்பப்படுகிறான் என தெரிந்தும், மனதின் மௌன மொழியை மதிக்காமல், முந்தியடித்து முன்சென்று, நெரிசலை மேலும் நெரிசலாக்குவது தீயொழுக்கம்தான்..

தெரிந்தே வரி ஏய்ப்பு செய்யதும், கையூட்டு வாங்கி அடுத்தவர்களை அல்லல் படவைப்பதும், படிக்காத பாமரர்களை இலவசத்தை காட்டி இழுத்து ஏமாத்துவதும், தீயொழுக்கம்தான்.

ஆறறிவு படைத்த, படித்த மனிதர்களே...சற்று சிந்தியுங்கள்...
காசு பணம் கிடைக்காவிட்டாலும், சின்னச் சின்ன ஆத்ம திருப்தியாவது கிடைக்கும், ஒவ்வொரு ஒழுக்கமுள்ள செயலுக்கும்.
சிறு துளி பெரு வெள்ளம் போல் வாழ்க்கை வசந்தமாகமாறும், ஒழுக்கத்தை உயிராக உணர்ந்தால்....

Tuesday, April 3, 2007

ஏன் அரசியல்? - இலவசக் கல்வி

கல்வி என்பது ஒரு செல்வம். ஒரு சமூகத்தின் உயிர் நாடி கல்வி. அமைதியின் ஆணி வேர் கல்வி. முன்னேற்றத்தின் மூலதனம் கல்வி. இவ்வளவு மதிப்பு மிக்க செல்வம், ஏழைகளுக்கு எட்டா காட்சிப் பொருளாக சமூக சந்தையில்.

வரி விலக்கு அளித்ததால், கருப்பு பண முதலைகள் கண் பார்வை கல்வியின் பக்கம் திரும்பியது. கல்வி காவலர், பகுத்தறிவு பகலவன், என பல பட்டப் பெயர்களுடன் பணம் பார்த்தார்கள், பயங்கரவாதிகள். நல்ல எண்ணத்தில் வரி விலக்கு அளித்தால், அதை பயன்படுத்தி குறுகிய எண்ணத்துடன் கோடிகளை குவித்தார்கள் கொள்ளைக்காரர்கள்.

பால் குடி மறக்காத, குழந்தையை பள்ளியில் சேர்க்க ஐயாயிரம் ருபாய், மருந்துவம் படிக்க இருப்பந்தைந்து லட்சங்கள்.பொறியியல் படிக்க ஆயிரம் முதல் லட்சங்கள் வரை. இவ்வாறு கல்வியை பண்டமாற்று முறையில் பயின்றவர்களிடம் பயனை எதிர் பார்க்க முடியுமா?? அவர்களின் ஓட்டமும் பணத்தைத் தேடி.

ஒருபுறம் இலவச கல்வி. மறுபுறம் வியாபாரமாகக் கல்வி. இலவச கல்வி பயின்றவர்கள், எட்டாம் வகுப்பும் எட்டாத நிலையில், ஐந்துக்கும் பத்துக்கும், அல்லும் பகலும் பாடு பட்டுவிட்டு, சரியான உணவும், உடையும் இல்லாமலே வாழ்க்கயை ஒட்டுகின்றனர். காசு இருப்பவர்கள் படிக்காவிட்டாலும், பதட்டுடன் மேல் வர்க்க எஞமான்களாக சமூகத்தில்..இதையும் மீறி படித்து விட்டாலும், சாதி, மதம், மொழி என எண்ணற்ற முட்டுக்கட்டைகள், முன்னேற்றத்தை முறியடிக்க!!!

வரி விதிப்பதில், சட்டத்தின் முன்னிலையில் - இது போன்ற எண்ணற்ற விசயங்களில் அனைவரையும் சமமாக பாவிக்கும் அரசாங்கம், ஏன் அனைவருக்கும் ஒரே மாதிரியன இலவச கல்வியை அமல் படுத்த முடியாது..?

படை செலவையும், பாதுகாப்பு செலவையும் ஏற்கும் அரசாங்கம் ஏன் படிப்பு செலவையும் ஏற்கக்கூடாது..?

இலவச கல்விகாக வரியை கொஞ்சம் அதிகப் படுத்தி அதை அப்படியே கல்விக்காக பயன்படுத்தினால், வல்லுனர்களும் அறிஞர்களும் உருவாகவிட்டலும், ஒழுக்கமுள்ள சமுகமாக, நேர்மையான சமுகமாக, நமது சமூகம் உருவெடுக்கும் என்பதில் கடுகளவும் சந்தேகம் இல்லை.

Friday, March 23, 2007

ஏன் அரசியல்?

நீ ஏன் அரசியல்ல இறங்கக்குடாது?? - , கேட்ட அடுத்த நிமிடம், "அரசியலா!!! - எனக்கும் அதுக்கும் சம்மந்தம் இல்லை", "அது ஒரு சாக்கடை அதில் யார் இறங்குவது", "பணம் இருக்கிறவர்கள் மட்டுமே வர முடியும் நம்மால் முடியாது", "அது ரவுடிகளின் ராஞ்யம் நம்மை அழித்துவிடுவார்கள்" "எனக்கு குடும்பம் இருக்கிறது" - இது போல் எண்ணற்ற எதிர்வாத பதில்கள்.

ஒரு சில எழுத்துக்களால் ஆன சின்னக் கேள்வி. இருப்பினும், ஆழ்ந்து யோசிக்க வேண்டிய அற்புதமான கேள்வி.

நமது இன்பம்-துன்பம், உயர்வு-தாழ்வு, முன்னேற்றம்-பின்னேற்றம், வாழ்வு-சாவு, இது போன்ற, வாழ்வின் ஒவ்வோர் அங்கத்தின், ஆணிவேர் அரசியல்.
நம்மை சுற்றி நடக்கும் ஒவ்வொரு விசயத்திலும், எலும்பும் சதையும் போல், அரசியல் பிண்ணிப் படர்ந்து கிடக்கிறது.

அப்படிப்பட்ட அரசியல் அழுக்கு பிடித்து, கரைகள் படிந்து, அருகில் அணுக முடியாதபடி, பயங்கரமாக இருக்கிறது.

மக்களால் மக்களுக்காக நடத்தப் படவேண்டிய அரசியல் ஒரு சிலரின் சுயநோக்குச் சிந்தனைகளால் சுருண்டு கிடக்கிறது.

படித்த பண்புள்ள இளைஞர்கள் அரசியலுக்கு வரவேண்டும் என்பது பலரின் பகல் கனவாகவே பவனிவருகிறது.

இளைஞர்களால் இது மாறும் என்ற தொலை நோக்குப் பார்வையில், என்னுடைய நேர்வாதச் சிந்தனைகளுடன், இனிவரும் பதிப்புகள்...

Friday, March 16, 2007

எனது படைப்புகள்...

கனவு.....
இன்று உன் மனதின் கனவு
நாளை நம் வாழ்வின் நனவு

நீ..
கருத்தும் நீயே, காட்சியும் நீயே,
புதுமையும் நீயே, புதிரும் நீயே,

முதலும் நீயே, முடிவும் நீயே,
முயற்சியும் நீயே, முட்டுக்கட்டையும் நீயே,

நிதானமும் நீயே, நிம்மதியும் நீயே,
நிழலும் நீயே, நெருப்பும் நீயே,
நித்தமும் நீயே, நிந்திரையிலும் நீயே,

வாழ்வும் நீயே, வ்சந்தமும் நீயே,
வாசிப்பும் நீயே, வர்ணிப்பும் நீயே,
வித்தும் நீயே, விமர்சிப்பும் நீயே,

இனிமையும் நீயே, இடைஞ்சலும் நீயே,
இன்றும் நீயே, இனிமேலும் நீயே..

வேண்டியது....
செய்ய வேண்டியது கடைமை
பெறவேண்டியது உரிமை

அளிக்க வேண்டியது அன்பை
அடைய வேண்டியது புகழை

நம்ப வேண்டியது துணிவை
காட்ட வேண்டியது பணிவை

இருக்க வேண்டியது பொறுமை
இப்படியிருந்தால் வாழ்வே இனிமை

வாழ்வு...
ஒன்று பெற்றால் உண்டு வாழ்வு
இரண்டு பெற்றால் இறுகிய வாழ்வு
மூன்று பெற்றால் முடிந்தது வாழ்வு
இதற்குமேல் இந்தியாவிற்கு இல்லை வாழ்வு..

Monday, March 12, 2007

உனக்கு நாட்டுப்பற்று இருக்கா..??

(இருவரின் அர்த்தமற்ற அரட்டையில், ஒருவர்)
கிரிக்கெட்டில் அவனுக ஜெய்த்த என்ன.. தோத்தா என்ன!!

(கோபத்துடன் அடுத்தவர் )
உனக்கு நாட்டுப்பற்று இருக்கா..??

ஏன் இந்த கேள்வி..? அதுவும் கோபத்துடன்.எவ்வளவு பெரிய விசியம் நாட்டுப்பற்று.

கிரிக்கெட் ஒரு விளையாட்டு..பதினோர் பேர் விளையடுவதை பலகோடி மக்கள் ஆர்வத்துடன், வேலைகளை விலக்கி வைத்து விட்டு, பொழுதை வீனடிக்கும் ஒரு விளையாட்டு..சூதாட்டம் செய்து மக்களை ஏமாற்றிய ஒரு விளையாட்டு..

ஆம் நாட்டுப்பற்று இல்லாததுதான்..காசு விளையாடும், இது போன்ற விளையாட்டுக்காக, நாளை வீணாக்காமல், ஆர்வம் இல்லாமல் யாரு ஜெய்த்த என்ன.. தோத்தா என்ன!! என்று இருப்பது நாட்டுப்பற்று இல்லாததுதான்.

வரி ஏய்க்கும் போதும், சாலையில் குப்பை போடும் போதும், உருத்தாத உள்ளத்திற்கு, ஒருவன், "கிரிக்கெட்டில் அவனுக ஜெய்த்த என்ன.. தோத்தா என்ன!!" என சொல்ல கேட்டு, கொந்தளிக்கும் கோபத்துடன் "உனக்கு நாட்டுப்பற்று இருக்க..??" என வினவுவது நாட்டுப்பற்றுதான்.

நேரடி ஒளிபரப்பு உரிமத்திற்கு, குடியரசுத் தலைவர் பிறப்பித்த அவசரச் சட்டம், புதுச் சட்டத்திற்கு மக்களவையில் மாசோத நிரைவேற்றம். என்ன வேகம்.!!! என்ன வேகம்!!! இது நம்மாலும் வேகமாக இயங்கமுடியும் என எடுத்துகாட்டுகிறது. இந்த வேகம் எல்லாவற்றிலும் இருந்தால் பாராட்டுதலுக்குரியது.

ஒன்றுக்கும் உதவாத இது போன்ற விசியங்களுக்கு நாட்டுப்பற்றை இழுப்பதை விட, நாட்டை சிறக்க வைக்கும் சின்னச் சின்ன விசியங்களிள் கவனம் செலுத்தினால் நாடும் முன்னேரும், நாமும் முன்னேருவோம்.

Friday, March 9, 2007

பாழாகும் பழனி !!!!

ஆறுபடை வீடுகளில் ஒன்றாம் பழனியில் பட்டப்பகலில் நடக்கும் பயங்கரங்களில் இதோ இங்கு சில..

பத்து ருபாய் முடி எடுக்க..அது மட்டுமின்றி பக்தர்களிடம் பறிப்பதோ, குறைந்தது இருபது, அதிகம் ஆளைப் பொறுத்தது. இது மன நிம்மதியை நாடி வருபவர்களுக்கு முதல் மனவருத்தம்.. பணக்காரர்களுக்கு சரி, ஏழைகளை எண்ணிப்பாருங்கள்.!!

அடுத்தது, புதியவர்கள் எனில் எமாற்றுபவர்களுக்கு, பஞ்சாமிர்தப் பதார்த்தம் கிடைத்த ஆனந்தம். ஆண்டிகள் வேடத்தில் அநியாயத்துக்கு எமாற்றுகிறார்கள். பத்து ருபாய்க்கு அர்ச்சனை, பிரசாதம். தேங்காயை கூட உடைக்காமல், உடைத்த தேங்காயை வைத்து ஏமாற்றுபவர்கள் என சட்டையில்லா சாமியார்களின் சாம்ராஞ்யமாக பழனி.இப்படி நம் மககளையே எமாற்ற பார்ப்பவர்கள் பாகிஸ்தான் பயங்கரவாதிகளை விட மோசமானவர்கள். காவல் நிலையம் இருந்தாலும், காசால் கண் கட்டபட்டு இருக்கலாம். இல்லை எனில் பட்டப் பகலில் இது போல பயங்கரங்களைப் பார்க்க முடியுமா?

அடுத்தது, சுற்றுப்புறச் சூழ்நிலையில் சுத்தம். சண்முக நதி முதல் சாமி சன்னிதி வரை சுத்தமானச் சூழ்நிலை என்பது பழனி அறியாத ஒன்று. மலையை சூற்றிலும் குப்பை மேடுகள், இதுவே மலையின் மகிமையை நமக்கு உணர்த்தும். தமிழ்நாட்டிலேயே அதிக வருவாய் வரும் இந்தக் கோவிலுக்கே இந்த நிலை எனில் மற்ற கோவில்களை எண்ணிப்பார்க்கத் தேவையில்லை. சல்லடை வைத்துச் சலித்தால் மட்டும் போதது, சற்றாவது சுற்றுப்புறச் சூழலையும் சுற்றிப் பார்க்க வேண்டும் அரசாங்கம்.

சாமிதரிசனம், பொதுதரிசன வழியில் செல்பவர்களுக்கு தெரிவது அங்கு இருக்கும் அர்ச்சகர்களின் தலைகள் மட்டுமே.. ஒன்று இரண்டு எனில் சரி, எதற்கு பத்துப் பதினைந்து..? இயன்றவரை இறையடிலாவது ஏமற்றாதீர்கள்.

அடுத்த மதத்தவர்கள், சாமியை தரிசிக்க அனுமதிக்கப் படுவது இல்லை. இறைவன் முன் அனைவரும் சமம் என்பது ஏட்டில் மட்டுமா??

இல்லாத கோவிலுக்கு சண்டையிடுவதை விடுத்து, இருக்கும் கோவிலையாவாது இன்னும் கொஞ்சம் மேம்படுத்தப் பாருங்கள்.. பாவிகளால் பாழாகிக் கொண்டிருக்கும் பழனியை பார் போற்றும் பழனியாக மாற்ற எண்ணுங்கள். மக்களே மாறுங்கள், நாடு நம்முடையது. ஏமாற்றாதீர்கள், எம் மக்களும் நம் சகோதரர்கள் தான் என எண்ணுங்கள்.

Friday, March 2, 2007

தமிழா ஆங்கிலமா..??-

பட்டிமன்றங்கள் முதல் பதவிக்காக பதுங்குபவர்கள் வரை பந்தாக பயன்படுத்திய வினா., இருப்பினும் இதோ என்னுடைய பார்வையில்..

என்னை பாதித்த பல நிகழ்வுகளினால் என்னை ஆலோசிக்கவைத்த கேள்வி..தமிழா ஆங்கிலமா..??

கடை வீதியில் பொருள் வாங்கும் போது ஆங்கிலத்தில் குழந்தையை அதட்டும் அம்மா..

இருவர்க்கும் தமிழ் தெரிந்தாலும் ஆங்கிலத்தில் வார்த்தைகளை பரிமாரிக் கொள்ளும் வாடிக்கையாளரும் கடைக்காரரும்..

நமக்கான சின்னச் சின்ன குறிப்புகளில் கூட (மளிகை பட்டியல் முதல் மறதிக்கு குறிப்பு எடுப்பது வரை) ஆங்கிலத்தில் எடுக்கும் பழக்கம்....

கையெழுத்து - யோசித்த்து கூட இல்லை தமிழில் போடுவது பற்றி!!!

தொல்லை தரும் தொலைகாட்சியில், கொஞ்சும் ஆங்கிலத்தின் நடுவில் ஆங்காங்கே இடையில் இன்பதமிழ்...

இவ்வாறு நம்மை அறியாமல் நமது சொத்தை தொலைத்துக் கொண்டு இருக்கிறோம் நாம்...

ஆங்கிலம் ஒரு மொழி, கத்துக்கொள்வது தவறு இல்லை. நம்மில் இல்லா நல்ல விசியங்களை கத்துகொள்ள ஒரு ஊடகம்..

முதாதையர் சொத்துகாக உறவினர்களின் உயிரை கூட எடுக்கும் இந்த காலத்தில், உயிரினும் மேலான தமிழை எப்படி உதாசனப்படுத்தலாம்..???

தமிழ் நமது சொத்து, உடலில் ஜீன்கள் போல், நமது உயிரில் கலந்தது தமிழ்.

வெட்டிப் பதட்டுக்காக, ஆங்கிலத்தில் அறையும் குறையுமாக, அல்லல் பட்டு அசத்த நினைப்பதை விட, தன்னார்வத்துடன் தமிழை நமது நாவீல் தவலவிட்டால், கொஞ்சம் கொஞ்சமாக, நம்முல் அழியும் அமுதத்தை அடுத்த பல தலைமுறைகளுக்கும் அள்ளிக்கொடுக்கலாம்.

Saturday, February 17, 2007

பூனைக்கு யார் மணி கட்டுவது..???

சரியா தவறா???

மூன்றவது நீதி மன்ற தீர்ப்பு..மறுபடியும் இடை தேர்தல் சென்னைக்கு..

வெட்டியான வேலையிலும் வெட்டியான வேலை
தவறு செய்தவர்களுக்கு மறுபடியும் வெற்றி...

நேரம் விரயம்..மக்களின் நேரம்.. நீதி மன்றத்தின் நேரம்
மணித்துளிகளின் மகிமை அறியா மனிதர்கள்....

தேவை இல்லா தொந்தரவுகள்
தேவை இல்லாதா வீண் செலவு..

இடையில் எமாளிகலாக நாம்..

தேர்தல் நடந்த பொது சட்டம் ஒழுங்கு காக்க படவில்லை..யார் காரணம்..? அவர்களுக்கு என்ன தண்டணை..?

அமைதியைய் அழித்து அத்துமீறி அராஞகத்தீன் துணையுடன் வெற்றி வாகையை வாங்கிய அரசியல்வாதிகளுக்கு என்ன தண்டணை..?

எதிர் காலத்தில் இது இருக்காது என்பதுக்கு என்ன உத்திரவாதம்..?

பூனைக்கு யார் மணி கட்டுவது..???