ஒரு காலத்தில்..ஆச்சர்யக் குறி..ஆனால் இப்போது கேள்விக் குறி...
நான் இந்த முறை பலருக்கு சுதந்திர வாழ்த்துச் செய்தி அனுப்பினேன். எனக்கும் பல வாழ்த்துச்செய்திகள் வந்தது..
வந்த ஒரு வாழ்த்துச் செய்தியின் தமிழாக்கம்...
சுதந்திரம் உரிமை அல்ல ..உணர்ச்சி..
பெருமை படுங்கள்..உணர்வதை எண்ணி...
அறுவது வருடங்கள், அறிவியலின் துணையோடு, அற்புதங்கள் அறங்கேரிக் கொண்டிரிக்கும் அருமையான வருடங்கள்...
என் மனதில் தோன்றிய சின்ன கேள்வி..சுதந்திரம் என்ற உணர்வை உண்மயாய் உணர்கிறோமா...??
சுதந்திரத்தை அதிகமாக உணருகிறோம் என எடுத்துக்கொண்டால்..சுதந்திரத்தின் எதிர் பதமான பயத்தை கம்மியாக உணர்வதாக ஒத்துக்கொள்ள வேண்டும்...
எனது இருபத்தியாறு வருட வாழ்க்கையில்.. நாளுக்கு நாள்..பயத்தின் விழுக்காடு..பொது வாழ்க்கையிலும் சரி தனி வாழ்க்கையிலும் சரி, அதிகமாகிக் கொண்டே இருக்கிறதே, தவிர குறைந்ததாகவே தோனவில்லை...
கருத்துக்களைச் சொல்ல பயம், இரவில் பெண்கள் வெளியே வர பயம், வீடு வாங்குவதை நினைத்தால் பயம், அரசு அலுவலகங்களை அண்ட பயம்..காலை சாலை நெரிசலில் வாகனத்தை எடுக்க பயம்..குழந்தைகளுக்கு நல்ல கல்வி என என்னுவதே பயம்..
எங்கும், பணம் இருந்தால் பயம் இல்லை என்ற நிலை..பாலாகும் மனிதம்...
உண்மை உரைக்கத்தான் செய்யும்..உணர்வுகளை உதாசினப்படுத்தாமல், உணர்வுகளுக்கு, உயிர் கொடுக்க உழைப்போம்..ஒன்று சேர உயர்வோம்...
Thursday, August 16, 2007
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment