Friday, March 9, 2007

பாழாகும் பழனி !!!!

ஆறுபடை வீடுகளில் ஒன்றாம் பழனியில் பட்டப்பகலில் நடக்கும் பயங்கரங்களில் இதோ இங்கு சில..

பத்து ருபாய் முடி எடுக்க..அது மட்டுமின்றி பக்தர்களிடம் பறிப்பதோ, குறைந்தது இருபது, அதிகம் ஆளைப் பொறுத்தது. இது மன நிம்மதியை நாடி வருபவர்களுக்கு முதல் மனவருத்தம்.. பணக்காரர்களுக்கு சரி, ஏழைகளை எண்ணிப்பாருங்கள்.!!

அடுத்தது, புதியவர்கள் எனில் எமாற்றுபவர்களுக்கு, பஞ்சாமிர்தப் பதார்த்தம் கிடைத்த ஆனந்தம். ஆண்டிகள் வேடத்தில் அநியாயத்துக்கு எமாற்றுகிறார்கள். பத்து ருபாய்க்கு அர்ச்சனை, பிரசாதம். தேங்காயை கூட உடைக்காமல், உடைத்த தேங்காயை வைத்து ஏமாற்றுபவர்கள் என சட்டையில்லா சாமியார்களின் சாம்ராஞ்யமாக பழனி.இப்படி நம் மககளையே எமாற்ற பார்ப்பவர்கள் பாகிஸ்தான் பயங்கரவாதிகளை விட மோசமானவர்கள். காவல் நிலையம் இருந்தாலும், காசால் கண் கட்டபட்டு இருக்கலாம். இல்லை எனில் பட்டப் பகலில் இது போல பயங்கரங்களைப் பார்க்க முடியுமா?

அடுத்தது, சுற்றுப்புறச் சூழ்நிலையில் சுத்தம். சண்முக நதி முதல் சாமி சன்னிதி வரை சுத்தமானச் சூழ்நிலை என்பது பழனி அறியாத ஒன்று. மலையை சூற்றிலும் குப்பை மேடுகள், இதுவே மலையின் மகிமையை நமக்கு உணர்த்தும். தமிழ்நாட்டிலேயே அதிக வருவாய் வரும் இந்தக் கோவிலுக்கே இந்த நிலை எனில் மற்ற கோவில்களை எண்ணிப்பார்க்கத் தேவையில்லை. சல்லடை வைத்துச் சலித்தால் மட்டும் போதது, சற்றாவது சுற்றுப்புறச் சூழலையும் சுற்றிப் பார்க்க வேண்டும் அரசாங்கம்.

சாமிதரிசனம், பொதுதரிசன வழியில் செல்பவர்களுக்கு தெரிவது அங்கு இருக்கும் அர்ச்சகர்களின் தலைகள் மட்டுமே.. ஒன்று இரண்டு எனில் சரி, எதற்கு பத்துப் பதினைந்து..? இயன்றவரை இறையடிலாவது ஏமற்றாதீர்கள்.

அடுத்த மதத்தவர்கள், சாமியை தரிசிக்க அனுமதிக்கப் படுவது இல்லை. இறைவன் முன் அனைவரும் சமம் என்பது ஏட்டில் மட்டுமா??

இல்லாத கோவிலுக்கு சண்டையிடுவதை விடுத்து, இருக்கும் கோவிலையாவாது இன்னும் கொஞ்சம் மேம்படுத்தப் பாருங்கள்.. பாவிகளால் பாழாகிக் கொண்டிருக்கும் பழனியை பார் போற்றும் பழனியாக மாற்ற எண்ணுங்கள். மக்களே மாறுங்கள், நாடு நம்முடையது. ஏமாற்றாதீர்கள், எம் மக்களும் நம் சகோதரர்கள் தான் என எண்ணுங்கள்.

No comments: