நீ ஏன் அரசியல்ல இறங்கக்குடாது?? - , கேட்ட அடுத்த நிமிடம், "அரசியலா!!! - எனக்கும் அதுக்கும் சம்மந்தம் இல்லை", "அது ஒரு சாக்கடை அதில் யார் இறங்குவது", "பணம் இருக்கிறவர்கள் மட்டுமே வர முடியும் நம்மால் முடியாது", "அது ரவுடிகளின் ராஞ்யம் நம்மை அழித்துவிடுவார்கள்" "எனக்கு குடும்பம் இருக்கிறது" - இது போல் எண்ணற்ற எதிர்வாத பதில்கள்.
ஒரு சில எழுத்துக்களால் ஆன சின்னக் கேள்வி. இருப்பினும், ஆழ்ந்து யோசிக்க வேண்டிய அற்புதமான கேள்வி.
நமது இன்பம்-துன்பம், உயர்வு-தாழ்வு, முன்னேற்றம்-பின்னேற்றம், வாழ்வு-சாவு, இது போன்ற, வாழ்வின் ஒவ்வோர் அங்கத்தின், ஆணிவேர் அரசியல்.
நம்மை சுற்றி நடக்கும் ஒவ்வொரு விசயத்திலும், எலும்பும் சதையும் போல், அரசியல் பிண்ணிப் படர்ந்து கிடக்கிறது.
அப்படிப்பட்ட அரசியல் அழுக்கு பிடித்து, கரைகள் படிந்து, அருகில் அணுக முடியாதபடி, பயங்கரமாக இருக்கிறது.
மக்களால் மக்களுக்காக நடத்தப் படவேண்டிய அரசியல் ஒரு சிலரின் சுயநோக்குச் சிந்தனைகளால் சுருண்டு கிடக்கிறது.
படித்த பண்புள்ள இளைஞர்கள் அரசியலுக்கு வரவேண்டும் என்பது பலரின் பகல் கனவாகவே பவனிவருகிறது.
இளைஞர்களால் இது மாறும் என்ற தொலை நோக்குப் பார்வையில், என்னுடைய நேர்வாதச் சிந்தனைகளுடன், இனிவரும் பதிப்புகள்...
Friday, March 23, 2007
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment