(இருவரின் அர்த்தமற்ற அரட்டையில், ஒருவர்)
கிரிக்கெட்டில் அவனுக ஜெய்த்த என்ன.. தோத்தா என்ன!!
(கோபத்துடன் அடுத்தவர் )
உனக்கு நாட்டுப்பற்று இருக்கா..??
ஏன் இந்த கேள்வி..? அதுவும் கோபத்துடன்.எவ்வளவு பெரிய விசியம் நாட்டுப்பற்று.
கிரிக்கெட் ஒரு விளையாட்டு..பதினோர் பேர் விளையடுவதை பலகோடி மக்கள் ஆர்வத்துடன், வேலைகளை விலக்கி வைத்து விட்டு, பொழுதை வீனடிக்கும் ஒரு விளையாட்டு..சூதாட்டம் செய்து மக்களை ஏமாற்றிய ஒரு விளையாட்டு..
ஆம் நாட்டுப்பற்று இல்லாததுதான்..காசு விளையாடும், இது போன்ற விளையாட்டுக்காக, நாளை வீணாக்காமல், ஆர்வம் இல்லாமல் யாரு ஜெய்த்த என்ன.. தோத்தா என்ன!! என்று இருப்பது நாட்டுப்பற்று இல்லாததுதான்.
வரி ஏய்க்கும் போதும், சாலையில் குப்பை போடும் போதும், உருத்தாத உள்ளத்திற்கு, ஒருவன், "கிரிக்கெட்டில் அவனுக ஜெய்த்த என்ன.. தோத்தா என்ன!!" என சொல்ல கேட்டு, கொந்தளிக்கும் கோபத்துடன் "உனக்கு நாட்டுப்பற்று இருக்க..??" என வினவுவது நாட்டுப்பற்றுதான்.
நேரடி ஒளிபரப்பு உரிமத்திற்கு, குடியரசுத் தலைவர் பிறப்பித்த அவசரச் சட்டம், புதுச் சட்டத்திற்கு மக்களவையில் மாசோத நிரைவேற்றம். என்ன வேகம்.!!! என்ன வேகம்!!! இது நம்மாலும் வேகமாக இயங்கமுடியும் என எடுத்துகாட்டுகிறது. இந்த வேகம் எல்லாவற்றிலும் இருந்தால் பாராட்டுதலுக்குரியது.
ஒன்றுக்கும் உதவாத இது போன்ற விசியங்களுக்கு நாட்டுப்பற்றை இழுப்பதை விட, நாட்டை சிறக்க வைக்கும் சின்னச் சின்ன விசியங்களிள் கவனம் செலுத்தினால் நாடும் முன்னேரும், நாமும் முன்னேருவோம்.
Monday, March 12, 2007
Subscribe to:
Post Comments (Atom)
2 comments:
This passage is really good and everyone has to understand about patriotism by going through the passage and also all the cricket fans need to know about this . Good Explanation for patriotism.
Have this passage read by all the Indians....Since most of the indians are cricket fans.
This is very good message for Indians,especially for young generation.We should see Cricket as only a game.
Post a Comment