Tuesday, May 1, 2007

ஏன் அரசியல்? - ஒழுக்கம்

நன்றிக்கு வித்தாகும் நல்லொழுக்கண் தீயொழுக்கம்
என்றும் இடும்பை தரும்..
.........என்பது வள்ளுவரின் பொய்யா மொழி...உண்மைதான்...இது எக்காலத்துக்கும் ஏத்த மொழிதான்.

நாம் அல்லல் படுவதற்க்கு ஆணிவேர், ஒழுக்கமின்மை. போக்குவரத்து நெரிசலில் புறள்வதற்கும், வறுமையில் வாடுவதற்கும், பட்டினிக்கும் பஞ்சத்திற்கும், நிம்மதியை துளைத்ததுற்கும் ஒரே காரணம் ஒழுக்கமின்மை.

ஒழுக்கமின்மை - நமது மனதிற்கு தவறு என தட்டும் ஒன்றை, மனதை சமாதானப்படுத்திவிட்டு, சாதிக்க நினைப்பதே ஒழுக்கமின்மை.

போக்குவரத்து நெரிசலில், நமக்கு முன் இருப்பவனும் நம்மை போல துன்பப்படுகிறான் என தெரிந்தும், மனதின் மௌன மொழியை மதிக்காமல், முந்தியடித்து முன்சென்று, நெரிசலை மேலும் நெரிசலாக்குவது தீயொழுக்கம்தான்..

தெரிந்தே வரி ஏய்ப்பு செய்யதும், கையூட்டு வாங்கி அடுத்தவர்களை அல்லல் படவைப்பதும், படிக்காத பாமரர்களை இலவசத்தை காட்டி இழுத்து ஏமாத்துவதும், தீயொழுக்கம்தான்.

ஆறறிவு படைத்த, படித்த மனிதர்களே...சற்று சிந்தியுங்கள்...
காசு பணம் கிடைக்காவிட்டாலும், சின்னச் சின்ன ஆத்ம திருப்தியாவது கிடைக்கும், ஒவ்வொரு ஒழுக்கமுள்ள செயலுக்கும்.
சிறு துளி பெரு வெள்ளம் போல் வாழ்க்கை வசந்தமாகமாறும், ஒழுக்கத்தை உயிராக உணர்ந்தால்....

No comments: