ஒரு காலத்தில் நமது நாடு, ஆங்கிலேயர்களிடம் அடிமைப்பட்டு, அல்லலை அனுபவித்து வந்தது...விடுதலை அடைந்தவுடன் விந்தைகள் விளையாடுவற்க்குப் பதில், சுய நலவாதிகளின் சுரண்டலால், களவும் கொள்ளையும் தாண்டவமாட ஆரம்பித்தது ...
வாழ்க்கையை தொலைத்து, நமக்கு சுதந்திர காற்றை அளித்தவர்கள், ஓரம் கட்டப்பட்டனர்.. ஒரத்தில் ஒதுங்கி ஒளிந்தவர்கள் எல்லாம், சமய சந்தர்பங்க்ளை பயன்படுத்தி, பணம் பார்த்தது மட்டும்மின்றி அரியணையிலும் அமர்ந்தார்கள்...
பட்டம் பதவிகளைக் காத்துக் கொள்ள, சுயநல சூழ்ச்சிகலாள், ஒன்றும் அறியா பாமரர்களை ஆசை காட்டி அடிமைகளாக்கினர், அவர்களை அறியவிடாமல்...
உரிமைகள் மறுக்கப்பட்டன, பணத்தின் மதிப்பு உயிரை விட உத்தமாக உயர்ந்தது.
சாதி, மொழி, மதம் போன்ற வேரருக்கப் படவேண்டிய பேதமைகளை...அழிக்காமல், மறைமுகமாக மெருகேற்றி மகிமை கூட்டினார்கள்...
தனது குடும்பம், தனது உறவினர்கள், தனக்கு தெரிந்தவர்கள் என குடியரசு, குடும்ப அரசுகளாக மாற அரம்பித்தது...
அராஞகத்தாலும் அடவடியாலும், நல்லவர்கள் அரசியலை அண்டாதபடி ஒடுக்கப்பட்டார்கள்...புரியாத புதிராய், கிடைத்தது சந்தோசம் என்ற எண்ணத்தில், அடிமைகளாய் இருப்பதை உணராமல் நாமும்....
Tuesday, May 22, 2007
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment